தி.மு.க. தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சாக்கோட்டை அன்பழகனுக்கு கழகத்தின் சார்பில் வாழ்த்து

1 Min Read

தஞ்சை, ஜூலை 21- திமுக தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக பொறுப்பேற்றுள்ள கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகனை 20.7.2025 அன்று காலை 8.30 மணி அளவில் சாக்கோட் டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கழகத்தின் சார்பில் பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

தஞ்சாவூர் மாவட்ட காப்பாளர் மு. அய்யனார், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், கும்பகோணம் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, கும்பகோணம் மாவட்ட செயலாளர் சு.துரைராசு, கும்பகோணம் மாவட்டத் துணைத் தலைவர் வ.அழகுவேல், நாகை மாவட்ட செயலாளர் ஜெ. பூபேஷ்குப்தா, பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.விஜயகுமார், குடந்தை மாவட்ட துணை செயலாளர் தமிழ்மணி மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ஜில்ராஜ், சோழபுரம் சித்தார்த்தன், திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் எம்.என்.கணேசன், கும்பகோணம் மாநகரத் தலைவர் வழக்குரைஞர் ரமேஷ், கும்பகோணம்  ஒன்றிய தலைவர் மருதநல்லூர் மகாலிங்கம், திருப்பனந்தாள் ஒன்றிய தலைவர் பட்டம் மோகன் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் சாக்கோட்டை அன்பழகனுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *