அரித்துவார், ஜூன் 15 – உத்த ராகண்ட் மாநிலத்தின் புரோலா நகரில் ஹிந்து அமைப்புகள் இஸ்லா மியர்களை வெளியேற்ற மிரட்டல் விடுத்து அதற்காக ‘லவ்ஜிகாத்’ என்ற ஒன்றை கிளப்பிவிட்டு மகா பஞ்சாயத்துக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் அந்நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட் டத்தில் உள்ள புரோலா நகரில் கடந்த மே 26இ-ல் இளைஞர் உள்ளிட்ட இருவர் நேபாளி வம்சா வளியை சேர்ந்த 2 மைனர் சகோதரிகளை கடத்த முயன்றார். இந்த விவகா ரத்தில் வேலைக்காக அழைத்துச்செல்லும் போது சில ஹிந்து அமைப்புகள் ‘லவ்ஜிகாத்’ கடத்தல் என்று நாடகம் ஆடி பெரும் பிரச்சினை ஆக்கியது வேலைக்கு அழைத்துச்சென்ற நபர் களில் ஒருவர் இஸ்லாமி யர் என்பதால் ‘லவ்ஜிகாத்’ என்று கூறிய ஹிந்து அமைப்புகளால் புரோலா மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களில் பதற்றம் உருவாகியுள் ளது. இதனால் முஸ்லிம்களால் நடத்தப்படும் 40-க்கும் மேற்பட்ட கடை கள் 2 வாரங்களாக மூடப் பட்டுள்ளன. லவ் ஜிகாத் தில் ஈடுபட்டவர்கள் நகரை விட்டு வெளியேற வேண்டும் என முஸ்லிம் களின் கடைகளில் கடந்த வாரம் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இரு சம்பவங்களிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும் விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம், தேவபூமி ரக் ஷா அபி யான் உள்ளிட்ட இந்து அமைப்புகளும் உள்ளூர் வர்த்தக அமைப்புகளும் லவ் ஜிகாத்துக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரத் தில் ஈடுபட்டுள்ளன.
மேலும் லவ் ஜிகாத் துக்கு எதிராக புரோலா நகரில் ஹிந்து அமைப் புகள் இன்று (ஜூன் 15) மகா பஞ்சாயத்துக்கு அழைப்பு விடுத்தன. இந்நிலையில் புரோலா நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு ஜூன் 19-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கிடை யில் முஸ்லிம் உரிமைக ளுக்காக போராடும் முஸ்லிம் சேவா சங்கதன் என்ற அமைப்பு டேராடூ னில் வரும் 18-ஆம் தேதி மகா பஞ்சாயத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
புரோலா நகரில் பல தலைமுறைகளாக வாழும் முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டும், அங்கு அமைதியை சீர் குலைக்க விரும்பும் சக்தி களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என உத்தராகண்ட் முதலமைச்சருக்கு மாநில வக்பு வாரியம் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.