மலேசியாவில் போதைப்பொருள் விருந்து 38 பல்கலைக்கழக மாணவர்கள் கைது

1 Min Read

சுபாங் ஜெயா, ஜூலை 21- சிலாங்கூர் மாநிலம் சுபாங் ஜெயாவில் ஒரு தனியார் வீட்டில் போதைப்பொருள் விருந்து நடத்தியதாக நம்பப்படும் 38 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசியக் காவல்துறையினர் நடத்திய சோதனையில் இவர்கள் கைதாகினர். கைது செய்யப்பட்ட அனைவரும் தனியார் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் என்றும், அவர்களின் வயது 18 முதல் 27 வரை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தில், போதைப்பொருளை விநியோகம் செய்ததாகக் கருதப்படும் நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினர் நடத்திய சோதனையில் 6.5 கிராம் கஞ்சாவும் 1.5 கிராம் கேட்டமின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்கள் அனைவரும் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *