சென்னை,ஜூன்15 – தமிழ்நாட்டில் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக சமீப ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்திருக் கும் ஊக்கத் தொகைத் திட்டங்கள் குறித்து நகர வர்த்தக சபைகளின் ஆலோ சனைக் குழு தலைமையில் ஒரு நாள் கருத்தரங்கு சென்னையில் ஒருங்கி ணைக்கப் பட்டது.
வர்த்தக சபை உறுப்பினர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த கருத்தரங்கு ஏற் பாடு செய்யப்பட்டிருந் தது. இந்நிகழ்வில் சென்னை வர்த்தக சபை, ஹிந்துஸ் தான் வர்த்தக சபை, ஆந்திர வர்த்தக சபை உள் ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன.
மின் வாகனம், மின் னணு பாகங்கள், ஆய்வு மற்றும் மேம்பாடு, ஜவுளி தொழில்நுட்பம், விமா னம் மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்து கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்திருக் கும் திட்டங்கள் குறித்து இந்தக் கருத்தரங்கில் கலந் து ரையாடப்பட்டது.
ஹிந்துஸ்தான் வர்த் தக சபையின் தலைவர் நாகப்பன் பேசுகையில், “தமிழ்நாடு அரசு தொழில் தொடங்குவதற்கு ஏது வான சூழலை உருவாக்கி உள்ளது. தொழில் துறையை ஊக்குவிக்கும் வகையில் முக்கிய திட்டங் களை தொடர்ந்து கொண்டு வந்தபடி உள்ளது. ஊக் கத் தொகை திட்டங்கள் தொழில்துறையில் முத லீடுகள் அதிகரிக்க உதவு கின்றன. மாநிலத்தின் வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கத்துக் கும் இத்திட்டங்கள் முக் கிய பங்களிக்கின்றன” என்று தெரிவித்தார்.