சென்னை பெரியார் திடலில் ‘வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை’ – சாகித்ய அகாடமி விருதாளருக்குப் பாராட்டு

1 Min Read

திராவிடர் கழகம்

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றமும், வாருங்கள் படிப்போம் குழுவும் இணைந்து நடத்தும் ‘வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை’ இன்று (20.7.2025) காலை பெரியார் திடலில் தொடங்கியது. 120 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் நிகழ்வாக ‘பால சாகித்ய புரஸ்கர் விருது‘ பெற்றுள்ள சிறுவர் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனைப் பாராட்டிச் சிறப்பித்துக் கேடயம் வழங்கப்பட்டது. திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி பாராட்டி உரையாற்றினார். உடன் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வா.நேரு, துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன், பொதுச் செயலாளர் பாவலர் செல்வ மீனாட்சிசுந்தரம், செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் குமரன், வாருங்கள் படிப்போம் ஒருங்கிணைப்பாளர் பேரா.உமா மகேஸ்வரி, பேரா.இரா.செங்கொடி ஆகியோர் உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *