நன்னிலம், ஜூன் 16- திருவாரூர் மாவட்டம். நன்னிலம் நகர, ஒன்றிய, கழக கலந்துரையாடல் கூட்டம் நன்னிலம் தந்தை பெரியார் படிப்பகத்தில் 13.6.2023 அன்று மாலை 4.30 மணியளவில் ஒன்றிய தலைவர் க.கலியபெருமாள் தலைமையி லும், மாவட்ட செயலாளர் வீர. கோவிந்தராஜ், ப.க.தலைவர். ச.கரிகாலன், நகர் தலைவர் தன. சஞ்சவி ஆகியோர் முன்னிலை யிலும் நடைபெற்றது. மாநில இளைஞரணி துணைச் செயலா ளர் நாத்திக.பொன்முடி கூட் டத் தின் நோக்க உரையாற்றினார்.
தலைமைக் கழக அமைப் பாளர் சு.கிருட்டிணமூர்த்தி, மாவட்ட தலைவர் வீ.மோகன் கருத்துரையாற்றினார்கள். நிகழ்வில் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் ஆசிரியர் ஆறுமுகம், ஓவியர் சங்கர், உரத்தநாடு எல்.கே.வெங்கடே சன், பழனிச்சாமி, வழக்குரைஞர் சரவணன், மாணவி வே.வினோ தினி, இளையராஜா, அறிவழகன் இன்னும் ஏராளமான கழக தோழர்கள் கலந்துகொண்டனர்.
இறுதியாக ஒன்றிய செயலாளர் இரா.தன்ராஜ் நன்றி கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்: ஓய்வு பெற்ற ஆசிரியர் கா.கார்மேகம், முடிகொண்டான் ஆசிரியர் சாரங்கபாணி மனைவி சுசீலா இவர்களுக்கு ஆழ்ந்த இரங்க லையும், வீர வணக்கத்தையும் இக்கூட்டம் தெரிவிக்கிறது.
தந்தை பெரியார் நடத்திய மனித உரிமை போர் வைக்கம் நூற்றாண்டு விழா. நீதி கட்சி நூற்றாண்டு விழா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் நகரம். ஒன்றியத்தில். கிராமம் கிராமமாக வெகு விமரிசையாகவும், தெருமுனை பிரச்சாரம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
அனைத்து பகுதிகளிலும் புதிய உறுப்பினர்களை சேர்த்து கழக அமைப்பை புதுப்பிப்பது எனவும், விடுதலை சந்தாக்களை புதுப்பித்து சந்தாக்களை வழங்குவது எனவும், ஈரோடு பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றுதல் எனவும், திரு வாரூர் மாவட்டத்தில் ஒரு நாள் முழுவதும் பெரியாரியல் பயிற்சி பட்டறை நடத்துவது எனவும், பயிற்சிப் பட்டறைக்கு நன்னிலம் நகரம்.ஒன்றியம் சார்பாக 30 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளையும் பங்கேற்க செய்வது எனவும், செப்டம்பர் 17 அறிவுலக ஆசான் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாளை கோலாகலமாக நன்னிலம் நகரத்தில். தந்தை பெரியார் பட ஊர்வலம் பொதுக் கூட்டமும் நடத்துவதோடு, நன்னிலம் ஒன் றியத்தில் கிளைக் கழக வாரியாக தெருமுனைப் பிரச்சாரம் நடத் துவது எனவும் தீர்மானிக்கப்பட் டது. நிகழ்வில் ப.க.தலைவர் ச.கரிகாலன் அனைவருக்கும் பய னாடை அணிவித்தார்.
ஜூலை 8இல் திருவாரூரில் நடைபெறும் பயிற்சிப் பட்ட றைக்கு நன்னிலம் நகர தலைவர் தன.சஞ்சீவி மாவட்ட தலைவர் வீ.மோகனிடம் ரூ.1,000 நன் கொடை அளித்தார்.