மாணவர்களின் கல்வி வளர்ச்சி குறித்து விவாதிக்க அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் வருகிற 25ஆம் தேதி நடக்கிறது

2 Min Read

சென்னை, ஜூலை 19 அரசுப் பள்ளிகளின் மேம்பாடு மற்றும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை பள்ளி மேலாண்மைக் குழுக் (SMC) கூட்டத்தை ஜூலை 25-ஆம் தேதி நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

நடப்புக் கல்வி ஆண்டின் முதல் கூட்டம்

கடந்த அக்டோபர் மாதம் முதல் அரசுப் பள்ளிகளில் எஸ்.எம்.சி குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இனி இந்த கூட்டங்களை மாதந்தோறும் நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டின் முதல் எஸ்.எம்.சி குழுக் கூட்டம் ஜூலை 25-ஆம் தேதி மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும். இந்தக் கூட்டத்தில், பள்ளிகள் மற்றும் மாணவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்

இந்தக் கூட்டத்தில், கீழ்க்கண்ட முக்கிய விவகாரங்கள் குறித்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் விரிவாக விவாதிக்க வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்லாஸ் தேர்வு (SLAAS Exam): மாணவர் களின் கற்றல் நிலையை மதிப்பிடும் தேர்வு.

திறன் இயக்க பயிற்சி: மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள். எண்ணும்,

எழுத்தும் திட்டம்: அடிப்படைக் கல்வித் திறன்களை மேம்படுத்துவதற்கான தமிழ்நாடு அரசின் முதன்மைத் திட்டம்.

இல்லம் தேடி கல்வி திட்டம்: கரோனா கால இடைவெளியை ஈடுசெய்ய உருவாக்கப்பட்ட திட்டம்.

உயர் கல்வி வழிகாட்டி: மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டுதல்கள் வழங்குதல்.

இடைநிற்றல் கணக்கெடுப்பு: பள்ளியில் இருந்து இடைநிற்கும் மாணவர்களைக் கண்ட றிந்து மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள்.

மாணவர்கள் உத்வேகம் பெறுவர்

மேற்கண்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் விரிவாக விவாதித்து, வழங்கப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி தலைமை ஆசிரியர்கள் இந்தக் கூட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்று சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டங்கள், பள்ளிகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *