தமிழ்நாட்டில் மேலும் ரூ.450 கோடி முதலீடு! ‘சியட்’ டயர் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

1 Min Read

சென்னை, ஜூலை 19- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு வெளிநாட்டு முன்னணி நிறுவனங்கள் தமிழ் நாட்டில் போட்டி போட்டு கொண்டு முதலீடுகள் செய்து வருகின்றன. இதன் காரணமாக, இந்தியாவிலேயே தமிழ்நாடு தொழில் துறையில் முதலிடத்தில் திகழ்கிறது.

இந்நிலையில், வாகனங்களுக்கான டயர் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான ‘சியட்’, தமிழ்நாட்டில் மேலும் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

அதன்படி, திருப்பெரும் புதூரில் உள்ள தனது ஆலையை 450 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்ய உள்ளதாக சியட் டயர் நிறுவனம் தெரிவித்துள்ளது. சிறீபெரும்புதூர் ஆலையில் ஆண்டுக்கு 70 லட்சம் டயர்கள் உற்பத்தியாகும் நிலையில், மேலும் அதிகப்படுத்த சியட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சியட் உற்பத்தி ஆலையின் இந்த விரிவாக்கம் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 2027 ஆம் ஆண்டுக்குள், கார்களுக்கான உதிரிபாகங்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக வும் ‘சியட்’ நிறுவனம் கூறியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *