ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் கைப்பந்து மற்றும் எறிப்பந்து போட்டியில் முதலிடம்

viduthalai
1 Min Read

ஜெயங்கொண்டம், ஜூலை 19- பள்ளி கல்வித்துறை சார்பில் ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவிலான கைப்பந்து மற்றும் எறிப்பந்து போட்டி ஜெயங்கொண்டத்தில் உள்ள பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று (18.07.2025) நடை பெற்றது.

ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவில் உள்ள 14,17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவுகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாண வர்கள் கலந்து கொண்டு ஆண்கள் கைப்பந்து போட்டியில் 17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட இரண்டு பிரிவிலும் முதலிடத்தையும் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் இரண்டாம் இடத்தையும் பிடித்து, எறிப்பந்து போட்டியில் ஆண்கள் 14 மற்றும் 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் முதலிடத்தையும், 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் இரண்டாம் இடத்தையும், பெண்கள் 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் முதலிடத்தையும் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் இரண்டாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.

இதில் முதலிடம் பிடித்த அய்ந்து அணி களும் மாவட்ட போட் டியில் பங்கு பெற தகுதி பெற்றனர். போட்டியில் வென்ற வீரர்கள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ், ரவிசங்கர் மற்றும் ரஞ்சனி ஆகியோரைப் பள்ளி தாளாளர் முதல்வர் R.கீதா மற்றும் இருபால் ஆசிரியர்கள் ஆகியோர்கள் வாழ்த்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *