⭐பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாக்கள் தாமதம்
⭐துணைவேந்தர் நியமனம் றீமருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வு
தமிழ்நாட்டு மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பைச் சீர்குலைக்கும் வகையில் பட்டமளிப்பு விழாக்களுக்கு தேதி வழங்காமல் கால தாமதப்படுத்தி வருதல், தமிழ்நாடு அரசின் பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பதில், அரசியலமைப்புச் சட்டவிதிகளுக்கு மாறாக செயல்பட்டு, ஒன்றிய அரசின் தலையீட்டை வலிந்து திணிக்க விரும்பி, துணைவேந் தர்களை நியமிக்காமல் தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் செயலற்ற தன்மையை உருவாக்குதல்,மேற்காணும் முக்கிய காரணங்களை முன்பே சிந்தித்து, தமிழ்நாடு பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டுவரப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்காமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் கிடப்பில் போட்டிருத்தல் ஆகியவற்றைக் கண்டித்தும், மருத்துவக் கல்லூரிச் சேர்க்கைக்கான கலந்தாய்வை ஒன்றிய அரசே நடத்த முயற்சிப்பதைக் கண்டித்தும் இன்று (16.6.2023) காலை 9.00 மணிக்கு சென்னை ஆளுநர் மாளிகை முன்பாக “மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு -தமிழ்நாடு” (Federation of Students Organisation – Tamil Nadu) சார்பில் ஒருங்கிணைப் பாளர்கள் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், நிரூபன் சக்கரவர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.