இயக்குநர் வேலுபிரபாகரன் மறைவிற்கு இரங்கல்!

1 Min Read

பகுத்தறிவாளரும், திரைப்பட இயக்குநருமான வேலு பிரபாகரன் (வயது 68) இன்று (18.7.2025) விடியற்காலை மறைவுற்றார் என்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.

ஒளிப்பதிவாளராக திரைப்படத் துறையில் நுழைந்து, பிறகு இயக்குநராக மாறி பல திரைப்படங்களை எடுத்தவர். அவரது ‘புரட்சிக்காரன்’ என்ற திரைப்படம் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. நாளை மனிதன்,  அசுரன், ராஜாளி கடவுள், சிவன் போன்ற படங்களையும் எடுத்தவர்.

பகுத்தறிவுக் கொள்கையில்  தீவிரமானவர் என்பதால் அவர் இயக்குநராக இருந்து எடுக்கப்பட்ட திரைப்படங்களில் முற்போக்குச் சிந்தனைகள் முக்கிய இடம் பெறும்.

பெரியார் திடலோடும், நம்மிடத்திலும் தொடர்போடு இருந்தவர். அவரின் மறைவு திரைப்படத் துறைக்கு மட்டுமல்ல; பகுத்தறிவாளர்களுக்கும் இழப்பாகும். அவர் பிரிவால் வருந்தும் அனைவருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

சென்னை     

             தலைவர்

18.7.2025          திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *