வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் காமராசர் பிறந்த நாள் – கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

1 Min Read

வெட்டிக்காடு, ஜூலை 18– கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை-15 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு ஜூலை 15ஆம் தேதி அன்னாரது பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் பல்வேறு மாணவச் செல்வங்கள் பங்கு பெற்று அவரது இயல்புகளையும், சாதனைகளையும் வெளிப்படுத்தினர். மேடையில் கவிதை, பேச்சு, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் மேடையில் நடத்தப்பட்டு அவருடைய சாதனைகளை மாணவர்களுக்கு விளக்கினர். கல்வி வளர்ச்சி நாளையொட்டி போட்டிகள்-தமிழ் கவிதை, ஆங்கில மற்றும் தமிழ் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவை பள்ளி முதல்வர் முன்னின்று நடத்தினார். அனைத்து ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *