தி.மு.க.வில் உறுப்பினர் சேர்க்கை 1.35 கோடியை கடந்தது

1 Min Read

சென்னை, ஜூலை 17- 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்குடன் தி.மு.க., பணிகளை துவக்கி உள்ளது.

இதற்காக ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை துவக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 1ஆம் தேதி உறுப்பினர் சேர்க்கை துவங்கியது. 15 நாட்களில் 1.35 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர்.

எனவே மக்கள் மன நிலை, தொண்டர்களின் எண்ண ஓட்டம் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரும்புகிறார். உறுப்பினர் சேர்க்கையில் தகிடுதத்தம் நடப்பதைத் தடுக்கவும், அதிக உறுப்பினர்களை சேர்க்கும், மாவட்ட செயலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கவும், குறைவாக சேர்த்த மாவட்டச் செயலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *