தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தின் கீழ் இயங்கும் பணிமனைகளில் திருவண்ணாமலை செல்லும் பேருந்துகளில் அதன் பெயர் அருணாசலம் என்று மாற்றி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதில் அளித்து தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், ‘‘இதை கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி! வழித்தட பலகை பெயர் இப்பொழுது திருவண்ணாமலை என்று திருத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலைக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து இயக்கப்படும் அனைத்துப் பேருந்து களிலும் ஒரே மாதிரியான பெயர்களை உறுதி செய்ய அனைத்து பணிமனைகளுக்கும் கடுமையான அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன’’ என்று கூறப்பட்டுள்ளது.
சிகிச்சை முடிந்து…
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், கேரளா திரும்பினார்.
பூமிக்குத் திரும்பினார்…
பன்னாட்டு விண்வெளி நிலையம் சென்ற வீரர் சுபான்ஷூ பூமி திரும்பினார்.