சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் குடும்பத்தினருடன் தமிழர் தலைவர் சந்திப்பு!

1 Min Read

அரசியல்

இந்தியாவின் மேனாள் பிரதமரும், சமூகநீதிக் காவலருமான மறைந்த வி.பி.சிங் அவர்களது துணைவியார் திருமதி.சீதாகுமாரி அவர்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெற்ற சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சென்னைக்கு வருகை தந்தார். அவரை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேரில் சந்தித்துப் பொன்னாடை அணிவித்தும் புத்தகங்களை வழங்கியும், வி.பி.சிங் உடனான தொடர்புகளைப்பற்றி நினைவுகூர்ந்து சிறிதுநேரம் உரையாடி மகிழ்ந்தனர். டில்லி பெரியார் மய்யம்பற்றி அதிகம் அம்மையார் விசாரித்து மகிழ்ந்தார்.. அவருடன் வருகை தந்த வி.பி.சிங்கின் பெயர்த்தி ரிச்சா மஞ்சரி சிங் அவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து, வி.பி.சிங் அவர்கள் எழுதிய கவிதை (தமிழ்) நூலை வழங்கினார் (சென்னை, 27.11.2023).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *