மறைந்த கலைஞர் போல ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்து வருகிறார் அகிலேஷ் யாதவ் பாராட்டு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசியல்

சென்னை, நவ.28 – மறைந்த கலைஞர் போல ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாட்டில் முதல மைச்சர் மு க ஸ்டாலின் குரல் கொடுத்து வருவதற்கு அகிலேஷ் யாதவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று (27.11.2023) நடைபெற்ற வி.பி.சிங் சிலை திறப்பு விழா வில் உத்தரபிரதேச மேனாள் முதலமைச்சர் அகி லேஷ் யாதவ் பேசியதாவது:- வி.பி.சிங்கிற்கு சிலை திறந் திருப்பதன் மூலம் அவரது மரபை நீங்கள் முன் னெடுத்து செல்வதற்கு பாராட்டு தெரிவித்துக் கொள் கிறேன். நாட்டின் புகழ்பெற்ற கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங் சிலை திறக்கப்பட்டுள்ளதற்கு நன்றி.

உங்களின் தலைவரும் தமிழ்நாட்டில் பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீடு 27 சதவீதம் மட்டு மல்லாது அதனை உயர்த்துவதற்கான பணிகளையும் செய்துள்ளதை நினைவு கூர வேண்டும்.

அதாவது மண்டல் ஆணைய பரிந்துரை அமல்படுத்தப்பட்டபோது இந்தியாவே பற்றி எரிந்தது. ஆனால், தென் னிந்தியாவில் குறிப்பாகதமிழ் நாட்டில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் காவலராக கலைஞர் திகழ்ந்தார். கலைஞர்போல ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னும் குரல் கொடுத்து வருவது பாராட்டத்தக்கது.

பெரியார், அண்ணா, கலைஞர் பாதையில் மக்கள் உரிமைக்கான வி.பி.சிங்கின் போராட்டத்தை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம். 

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டவர் களுக்கு காலம், காலமாக மறுக்கப்பட்ட உரிமைகளை மண்டல் ஆணையம் மூலமாக பெற்றுத் தந்த வி.பி. சிங்கிற்கு சிலை அமைத்துள்ளது உண்மையில் மகிழ்ச்சிக்குரிய விஷயம். 

இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *