தடகளப் போட்டி பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவர்கள் சாதனை

1 Min Read

வெட்டிக்காடு, ஜூலை15- 2025-2026ஆம் கல்வி ஆண் டிற்கான அரசு நடத்திய குறுவட்ட அளவிலான  தடகளப் போட்டிகள் 10.07.2025 அன்று தொடங்கியது.

இதில் முதற்கட்டமாக பல்வேறு வகையான தடகளப் போட்டிகள் பட்டுக்கோட்டை கரம்பயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

வெட்டிக்காடு பெரியார் மெட்ரி குலேஷன் பள்ளி மாணவ மாணவிகள் 23 பேர் பங்கு பெற்று 1 முதல் பரிசு, 3-இரண்டாம் பரிசு, 4-மூன்றாம் பரிசு மொத்தம்  8 பரிசுகள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மேலும் முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்ற  4  மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கு பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர.

பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர் பெரு மக்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் வெற்றி பெற்ற மாணவிகளையும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியரையும் பாராட்டி மகிழ்ந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *