பேரிடர் காலங்களில் துயருறும் மக்களுக்கு முன்னின்று எந்த நேரத்திலும் செயலாற்றிடவும், உடல் வலிவும் உள்ள உறுதியும் தனிமனித ஒழுக்கமும், பொது ஒழுக்கமுமுள்ள இளைஞர்களை உருவாக்கிடும் நோக்கில் பெரியார் சமுகக் காப்பு அணியின் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. மாநில, மாவட்டக் கழகக் பொறுப்பாளர்கள் பங்கேற்கும் கழக மாவட்டங்களைச் சேர்ந்த தகுதியான 5 தோழர்களை ஒவ்வொரு மாவட்டமும் பங்கேற்கச் செய்திடுமாறு அறிவுறுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நாள் : 09.08.2025 சனி மற்றும் 10.08.2025 ஞாயிறு
இடம் : மதுரை
வயது : 18 வயது முதல் 30 வயது வரை
பங்கேற்கும் கழக மாவட்டங்கள்:
மதுரை மாநகர், மதுரை புறநகர், சிவகங்கை, இராமநாத புரம், காரைக்குடி, அறந்தாங்கி, புதுக்கோட்டை, திண்டுக்கல், பழனி, தேனி, கம்பம், விருதுநகர், இராஜபாளையம், தென் காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி.
– சோ.சுரேஷ், மாநில அமைப்பாளர்
பெரியார் சமுகக் காப்பு அணி, 9710944834