விருதுநகர் பெ.சந்தனம் இல்ல இணையேற்பு விழா!

1 Min Read

விருதுநகர், ஜூலை 15 விருதுநகர் மாவட்ட  கழக அமைப்பாளர் பெ.சந்தனம் – வள்ளி இணையரது பேரனும், பாலையம்பட்டி ந.சிவக்குமார் – அமுதா இணையரது மகனுமான சி.உதயகுமார், திருச்சி திருமங்கலம் பொ.வீரப்பன் – பத்மாவதி இணையரது மகள் வீ.பிரேமா  ஆகியோரின்  இணை ஏற்பு விழா 13.07.2025 ஞாயிறு காலை 8 மணிக்கு, பாலையம்பட்டி விஜய் மகாலில் நடைபெற்றது.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் ந.ஆனந்தம் தலைமை ஏற்று வாழ்த்துரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் விடுதலை தி.ஆதவன் மணமக்கள் உறுதிமொழி ஏற்கச் செய்து இணை ஏற்பு விழாவினை நடத்தினார். மாவட்டத் துணைத் தலைவர் பா.இராசேந்திரன், துணைச் செயலாளர் இரா.அழகர், பொதுக்குழு உறுப்பினர் வெ.முரளி, இரா.முத்தையா,  தோழர்கள் பெருமளவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். இணை ஏற்பு விழா மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.1000-/ நன்கொடையை வழங்கினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *