ஜாதி ஒழிப்பு வீரவணக்க நாள்-நவம்பர் 26

1 Min Read

அரசியல்

திருமருகல், நவ. 28- நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புத்தகரம் தந்தை பெரியார் படிப்பகத்தில் நவ. 26 ஜாதி ஒழிப்பு வீர வணக்க நாளை முன்னிட்டு 26.11.2023 அன்று காலை 10 மணி அளவில் ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகின்ற வகையில் தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு வீரர்க ளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலி யன், நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ் குப்தா, நாகை மாவட்ட துணைத்தலைவர் பொன்.செல்வ ராசு,மாநில சட்டக் கல்லூரி மாண வர் கழக அமைப்பாளர் மு.இள மாறன், மாவட்ட இளைஞரணி தலைவர் சு.ராஜ்மோகன், ஒன்றிய இளைஞர் அணி தலைவர் செ.சண் முகம், திராவிட முன்னேற்றக் கழ கத்தை சார்ந்த மாவட்ட ஆதிதிரா விடர் நலக்குழு துணை அமைப் பாளர் பாஸ்போர்ட் சேகர், ஒன் றிய பொறுப்பாளர் தெ.கண்ண தாசன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சவு.பிர பாகரன். ஒன்றிய துணை செயலாளர் சுமதிமணிமாறன், இளை ஞர் அணி பொறுப்பாளர்கள் எஸ்.வி.ராம்கி, எஸ்.அப்துல்ரஹீம், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணியின் பொறுப்பாளர் க.சப ரேஸ்வரன் எஸ்.எப்.அய் பொறுப் பாளர் முகிலன்,மற்றும் இராஜ.விஜயராகவன்,ச.வினோத், மற்றும் தோழர்கள் பொறுப்பாளர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *