ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

28.11.2023

டெக்கான் கிரானிக்கல்,சென்னை

* ஒடிசா முதலமைச்சரின் சிறப்பு தனி செயலராக இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி கார்த்திகேய பாண்டியன் முதலமைச்சர் முன்னிலையில் பிஜூ ஜனதா தளத்தில் உறுப்பினராக சேர்ந்தார். கட்சியில் முக்கிய பதவி கிடைக்க வாய்ப்பு.

* மக்கள் தொகை கணக்கெடுப்போடு, ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்திடுக, வி.பி.சிங் சிலை திறந்து வைத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மோடி அரசுக்கு வேண்டுகோள்.

* தெலங்கானா தேர்தல் பரப்புரையில் பிரியங்கா பேசும் கூட்டத்திற்கு மக்கள் அதிகமாக திரள்கின்றனர். இந்திரா காந்தி போல உருவ ஒற்றுமை என மகிழ்ச்சி.

தி இந்து

* மோடி அரசின் தனியார்மயமாக்கல் நடவடிக்கை யானது சமத்துவத்திற்கான அனைத்து போராட்டங்களையும் ரத்து செய்யும் என வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அகிலேஷ் யாதவ் எச்சரிக்கை.

டைம்ஸ் ஆப் இந்தியா

* காந்தியாரையும் மோடியையும் ஒன்றாக ஒப்பிட்டு பேசிய மாநிலங்களவைத் தலைவரான குடியரசு துணைத் தலைவரின் பேச்சுக்கு எதிர்ப்பு. முகத்துதி செய்வது  நீங்கள் வகிக்கும் உயர்ந்த பதவிக்கு அழகல்ல என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடும் தாக்கு.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *