எச்சரிக்கை – எச்சரிக்கை ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.15 லட்சம் இழந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

Viduthalai
1 Min Read

மதுரை, ஜூலை 14 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சில்லாம்பட்டியை சேர்ந்தவர் சின்னராஜா (வயது 35). ஓட்டுநர் பயிற்சி நிறுவனத்தில் ஓட்டுநர் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு ரூபாபதி என்ற மனைவியும், 7 வயதில் மகனும், 5 வயதில் மகளும் உள்ளனர்.

சின்னராஜா, கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்டங்களில் தோல்வி அடைந்து ரூ.15 லட்சத்துக்கும் மேலாகக் கடனாளியாக மாறியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் 2 நாள்களுக்கு முன் மன உளைச்சலில் வீட்டை விட்டு சின்னராஜா வெளியே சென்று விட்டார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையே உசிலம்பட்டி அருகே சின்னராஜா ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *