விழுப்புரத்தில் துண்டறிக்கை பரப்புரை

1 Min Read

விழுப்புரம், ஜூலை 12– “சமஸ்கிருதத் திற்கு மட்டும் ரூ.2,533 கோடி! ஒன்றிய ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. சூட்சுமத்தைப் புரிந்து கொள்வீர்!” – என்று திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய அறிக்கையினை விழுப்புரத்தில் திராவிட மாணவர் கழகம் சார்பில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் துண்டறிக்கையாக வழங்கி (09.07.2025) பரப்புரை செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட கழகத்  தலைவர் சே.வ.கோபண்ணா தலைமையில் திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் மு.இளமாறன், நகர தலைவர் இ.இராஜேந்திரன், அ.சதிஷ், மாவட்ட அமைப்பாளர் கொ.பூங் கான் மற்றும் விழுப்புரம் சட்டக் கல்லூரி மாணவர்கள் வேல்.அஜய், க.கனியமுதன், மு.விசுவா, பா.தசரதன், அழகு.செந்தில்குமார் ஆகியோர் இப்பரப்புரையில் ஈடுபட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *