எந்த பதவியிலும் இல்லாத அண்ணாமலை வசூலில் ஈடுபட்டு வருகிறார் ஜோதிமணி எம்.பி குற்றச்சாட்டு

1 Min Read

தமிழ்நாடு

கரூர், நவ.12 எந்த பதவியிலும் இல்லாத அண்ணாமலை பெரிய வசூலில் ஈடுபட்டு வருகிறார் என்று கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார். 

கரூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஜோதிமணி நேற்று (11.11.2023) கரூரில் அளித்த பேட்டி: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கொள்ளையில் ஈடுபடுவதற்காகவே நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். சிவகங்கை மாவட்டத்திலும், மதுரை மாவட்டத்திலும் நடை பயணம் செய்ய பணம் கேட்ட ஆடியோ வெளியாகியுள்ளது. எம்எஸ்எம்இ ஆணையம் என்ற போலி நிறுவனம் நடத்தி பாஜவினரிடமே பணம் வசூல் செய்துள்ளனர். இதற்கும் பாஜ மாநில தலைவர் அண்ணாமலைக்கும் தொடர்பு இருக்கிறது.

இது தொடர்பாக சேலத்தில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள் ளது. ஆனால், ஒன்றிய அரசின் முத்திரை தொடர்பான புகார் என்பதால், ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இந்நிலையில் கைது செய்யப்பட்டவரை பாஜ வழக்குரைஞர் அணி தலைவரே பிணையில் எடுக்கிறார். எந்த பதவியிலும் இல்லாத அண்ணாமலை பெரிய வசூலில் ஈடுபட்டு வருகிறார்.அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுத்து ஒன்றிய அரசு பாதுகாக்கிறது. கரூர்- _ சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கொண்டு வந்தது குறித்த ஆதாரங்களை நான் தருகிறேன். சொந்தம் கொண்டாடும் பாஜ, அதிமுகவினரும் அவர்களது ஆதாரங்களை வெளியிடட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *