சென்னை, ஜூலை 12– உலக மக்கள் தொகை நாளையொட்டி விடுத்த சமூக வலைதளப்பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “தமிழ்நாடு உங்களுக்கு (ஒன்றிய அரசுக்கு) அடிபணியாது! நாங்கள் ஒருமித்து எழுவோம்! இது டில்லி அணிக்கு எதிரான அணி!” என்று சூளுரைத்துள்ளார்.
முதலமைச்சரும் – திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு வருமாறு:–
உலக மக்கள்தொகை நாளில், ஒன்றிய அரசுக்கு ஒரு நினைவூட்டல்:
4 தமிழ்நாடு மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் முன்னணி வகிக்கிறது,
4 பெண்களின் மாண்பைக் காத்து அவர்களுக்கான அதி காரத்தை வழங்குகிறது.
4 அனைவருக்கும் மருத்து வம் மற்றும் கல்வியை உறுதிசெய்கிறது.
4 நீடித்து நிலைக்கத்தக்க வளர்ச்சியை முன்னெ டுக்கிறது.
ஆனால், பதிலுக்கு நமக்குக் கிடைப்பது என்ன?
குறைவான மக்களவைத் தொகுதி கள். குறைவான நிதி ஒதுக்கீடு. நாடாளு மன்றத்தில் இருந்து ஒதுக்கப்படும் நமது குரல்.
ஏன்? ஏனென்றால், தமிழ்நாடு சரியானதைச் செய்தது. அதுதான் டில்லியை அச்சுறுத்துகிறது.
இதைவிட மோசம் என்ன என்றால், பழனிசாமி அவர்களும் அவரது கட்சியும் தமிழ்நாட்டின் பக்கம் நிற்காமல், டில்லிக்குத் துணைபோகிறார்கள். நாம் எட்டிய வளர்ச்சிக்காக நம்மைத் தண்டிக்கும் அநியாயமான தொகுதி மறுவரைய றையை ஆதரிக்கிறார்கள்.
தெளிவாகச் சொல்கிறேன்: தமிழ்நாடு உங்களுக்கு அடிபணியாது. நாங்கள் ஒருமித்து எழுவோம்! இது டில்லி அணிக்கு எதிரான ஓரணி!
நமது மண், மொழி, மானம் காக்க இணைவீர் ஓரணியில் தமிழ்நாடு!
இவ்வாறு அப்பதிவில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.