வடக்குத்து – அண்ணா கிராமத்தில் சுயமரியாதை இயக்கம்- ‘குடிஅரசு’ இதழ்- முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம்!

viduthalai
1 Min Read

வடகுத்து, ஜூலை 9 வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பக வளாகத்தில் கடந்த 25.6.2025 அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை மாவட்ட இளைஞரணி செயலாளர் டிஜிட்டல் ராமநாதன் தலைமையில் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு, ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு நிறைவு தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் நடைபெற்றது. கிளைக் கழகத் தலைவர் தங்க பாஸ்கர் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் தண்டபாணி, மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பெரியார் செல்வம், மாவட்ட துணை தலைவர் மணி வேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் உதயசங்கர், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் எழில் ஏந்தி, மாவட்ட பெரியார் வீர விளையாட்டு கழக தலைவர் மாணிக்கவேல், இடிமுழக்கம் இந்திரஜித், முருகன், தீபக்ராஜ், செல்வராஜ், மகளிர் அணி திராவிட மணி, முனியம்மாள், கலைச்செல்வி, சுமலதா ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் ‘‘இயக்கமும் ஏடும் சாதித்தது என்ன?’’ எனும் தலைப்பிலும், விழுப்புரம் முத்துவேல் ராமமூர்த்தி ‘‘தலைவர் கலைஞரின் பன்முகம்’’ எனும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர். நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *