தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு தேர்வு கட்டுப் பாட்டு அலுவலர் நியமனம்

1 Min Read

சென்னை, ஜூலை 9- டிஎன்பிஎஸ்சி புதிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக ஏ.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அரசுப் பணிகளுக்கான ஆட்களை தேர்வு செய்து வருகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப் பாட்டு அலுவலராக பணியாற்றி வந்த அ.ஜான் லூயிஸ், சில நாட்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக ஏ.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இதற்கு முன்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநராக பணியாற்றி வந்தார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் என்.முருகானந்தம் வெளியிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *