கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 9.7.2025

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் – தேர்தல் ஆணையத்துக்கு எதிராக அணி திரளும் எதிர்க்கட்சிகள்: தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவும் எதிர்ப்பு.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* பீகாரில் நடைபெறும் நிதிஷ் தலைமையிலான என்.டி.ஏ., டபுள் என்ஜின் ஆட்சியில், பீகார் குற்ற நகரங்களின் தலைமையிடமாக மாறி விட்டது, காங்கிரஸ் தலைவர் கார்கே கடும் கண்டனம்.

* மகாராட்டிரா அரசின் ஹிந்தித் திணிப்பு கொள்கைக்கு எதிரான தாக்கரே சகோதரர்களின் பேரணிக்கு, ஆளும் சிவசேனா அமைச்சர் ஆதரவு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகைக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம்: “2,000 ஆண்டுகளாக நீடிக்கும் பிரச்சனையை ஒரே நாளில் தீர்த்துவிட முடியாது. அதிகாரிகள் மெத்தனப்போக்கை கடைப்பிடித்துள்ளதாகவும், முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளை விக்கக கூடாது என்பதற்காக மக்களோடு மக்களாக சாமி தரிசனம் செய்தேன்” என வருத்தம்.

தி இந்து:

* தமிழ்நாடு மாநில தொல்பொருள் துறை (TNSDA), 2024-2025 அகழ்வாராய்ச்சி காலத்தில் ஏழு தொல்பொருள் தளங்களில் வெவ்வேறு அடுக்கு அடுக்குகளில் இருந்து தோண்டப்பட்ட 23 கரி மாதிரிகளை, முடுக்கி மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி (AMS) டேட்டிங்கிற்காக அமெரிக்காவில் உள்ள பீட்டா பகுப்பாய்வு ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளது.

* பெண்களுக்கான வேலை ஒதுக்கீட்டிற்கு பீகார் அமைச்சரவை ஒப்புதல்: “அரசாங்க வேலைகளில் 35% இடஒதுக்கீட்டின் பலனை மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே பெற முடியும் என்ற பொது நிர்வாகத் துறையின் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது,”

தி டெலிகிராப்:

* டி.அய்.எஸ்.எஸ். வேந்தரை நீக்குக: டாடா சமூக அறிவியல் நிறுவனத்தின் (டிஅய்எஸ்எஸ்) வேந்தர் டிபி சிங் மீது சிபிஅய் மருத்துவ கல்லூரி ஊழல் தொடர்பான குற்றப்பத்திரிக்கையில் பெயர் பதிந் திருப்பதை மேற்கோள் காட்டி, அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை.

* ஒரு காலத்தில் நேர்மையான, திறமையான என்று புகழப்பட்ட  பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், இப்போது தனது கூட்டணிக்குள்ளும் பீகார் மக்களிடையேயும் நம்பகத்தன்மை நெருக்கடியை எதிர்கொள்கிறார்.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *