அதிகளவு செயற்கை நிறமூட்டியதால் நஞ்சாக மாறியது பள்ளியில் வழங்கப்பட்ட ‘கேக்’கை சாப்பிட்ட 200 குழந்தைகள் பாதிப்பு தலைமையாசிரியர் உட்பட 6 பேர் கைது

1 Min Read

தியான்சூய், ஜூலை9- மத்திய சீனாவில் உள்ள  தியான்சூய் நகரில்(Tianshui city) செயல்பட்டு வரும் பிரபல மழலையர் பள்ளியில் பிரமுகர் ஒருவர் பிறந்த நாளின் போது மாணவர்களுக்கு ‘கேக்’ வழங்கப்பட்டது. இந்த கேக்கை சாப்பிட்ட 200 குழந்தைகள் வயிற்று வலியால் துடித்தனர். மேலும் சில குழந்தைகளின் பற்கள் கருப்பாக மாறின.

200 குழந்தைகளும் தற் போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் குழந் தைகள் சாப்பிட்ட கேக்கில் அதிகளவு செயற்கை நிறமூட்டி இருந்ததும் குழந்தைகளின் ரத்தத்தில் ஈயத்தின் அளவு அதிகமாக இருந்ததும் தெரிய வந்தது.

இந்த நிறமி தேசியப் பாதுகாப்பு வரம்பைவிட சுமார் 2,000 மடங்கு அதிகமாக இருந்ததாகச் சோதனையில் உறுதிப்படுத் தப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறையின் அறிவிப்பின் படி நடக்காமல் தன்னிச்சை யாக நடந்துகொண்ட பள்ளித்தலைமையாசிரியர். நிறமி அதிகம் சேர்த்த கேக் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட 6 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *