சென்னை, ஜூலை 8- தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு ஆலோசகர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.
பாஜக, திமுக, திரிணமூல் என பெரும்பாலான கட்சிகளுக்கு பல்வேறு தேர்தல்களில் தேர்தல் வியூகத்தை வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர் பீகாரில் ‘ஜன் சுராஜ்’ என தனிக்கட்சியைத் தொடங்கி செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டார். தவெகவின் சிறப்பு ஆலோசகராக செயல்பட்டு வந்தார்.
பீகார் தேர்தல்
இந்நிலையில் பீகார் மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் வரவுள்ளதால் தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு ஆலோசகர் பொறுப்பில் இருந்து சில காலம் விலகுவதாக பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
பிகார் பேரவைத் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபடவுள்ள தாகவும் தேர்தல் முடிந்தபின்னர் அதாவது நவம்பருக்குப் பிறகே தவெக ஆலோசகராக மீண்டும் செயல்படுவது பற்றி முடிவெடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.