கல்வி வளர்ச்சியில் ஏறு நடை போடும் தி.மு.க. நடப்புக் கல்வி ஆண்டில் அரசு கலைக் கல்லூரியில் 20 விழுக்காடு கூடுதல் இடங்களுக்கு அனுமதி அமைச்சர் கோவி. செழியன் உத்தரவு

viduthalai
2 Min Read

சென்னை, ஜூலை.8- தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 20 சதவீதம் கூடுதல் இடங்கள் உயர்த்தி அமைச்சர் கோவி. செழியன் உத்தரவிட்டுள்ளார்.

மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு உயர்கல்வித்துறை யின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் 1.26 லட்சம் இளங்கலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான, 2025-26-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு 2.22 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில், விண்ணப்ப கட்டணம் செலுத்திய மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே தரவரிசை பட்டியல் வெளி யிடப்பட்டது. முதல்கட்ட கலந்தாய்வு நடைபெற்று, முதலாம் ஆண்டு வகுப்புகள் கடந்த மாதம் தொடங்கியது.

இந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு 20 சதவீதம் கூடுதல் இடங்கள் நிரப்ப அனுமதி வழங்கி உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, அவர் வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

முதன்மை மாநிலம்

தமிழ்நாடு அரசின் புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட் டங்களால், கடந்த 4 ஆண்டுகளில் உயர்கல்வி சேர்க்கை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியாவிலேயே மாணவர் சேர்க்கை விகிதத்தில், தொடர்ந்து தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது.

இந்த ஆண்டும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்காக அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இதனை அறிந்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிதாக 15 அரசு கலை கல்லூரிகள் தொடங்கிட ஆணையிட்டு, தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

20 சதவீதம் கூடுதல் இடங்கள்

இருப்பினும் உயர்கல்வி பயில பெருமளவில் மாணவர்கள் காத்திருப்பதை அறிந்து, அரசு கலை கல்லூரிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்கவும், அதே போல் அரசு உதவிபெறும் கலை கல்லூரிகளுக்கு 15 சதவீதம் இடமும், சுயநிதி கலை கல்லூரிகளுக்கு 10 சதவீதமும் கூடுதலாக மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, நடப்பாண்டு கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு கூடுதல் இடங்கள் அறிவிக்கப்படுகிறது.

மாணவர்கள் இந்த நல் வாய்ப்பை பயன்படுத்தி, உயர் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற்று பெற்றோர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்து தங்களது வாழ்வில் முன்னேற்றம் பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *