இந்தியா முழுவதும் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை பொது வேலை நிறுத்தம் பேருந்துகள் – ஆட்டோக்கள் ஓடுமா?

viduthalai
3 Min Read

சென்னை, ஜூலை.8- 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் நாளை (9.7.2025) பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதற்கு தமிழக தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித் துள்ளதால் பஸ்கள், ஆட்டோக்கள் ஓடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொது வேலைநிறுத்தம்

17 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நாளை  பொது வேலைநிறுத்தம் அறி வித்துள்ளது.

ஒன்றிய, மாநில அரசு ஊழியர் களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழி லாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப் புகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.

தமிழ்நாட்டில் ஆதரவு

தமிழ்நாட்டில் இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்க மான சி.அய்.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.அய்.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைசிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. இது தொடர்பாக தொ.மு.ச. தொழிற்சங்க பேரவை யின் பொதுச்செயலாளர் மு.சண்முகம் நேற்று (7.7.2025) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியா தொழிலாளர் மாநாடு

இந்திய நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மோடி தலைமை யிலான பா.ஜனதா அரசு பொறுப் பேற்றது முதல் தொழிலாளர்க ளின் பிரச்சினைகளை விவாதிப் பதற்கு இந்தியா சுதந்திரம் அடைந் ததற்குப்பின் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த ‘இந்தியா தொழிலாளர் மாநாடு’ 2015-ஆம் ஆண்டு முதல் கூட்டப்படவில்லை.

இந்திய நாட்டு தொழிலாளிகள் 100 ஆண்டுகளுக்கு மேலாக போராடி பெற்ற பணியிட பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு சட்டங்கள் அனைத்தும் முழுமையாக தொழிலாளர்களுக்கு பயன்தரவில்லை என்றாலும், அந்தச் சட்டங்களை முன்வைத்து, தங்கள் உரிமைகளை பெற்று வந்தனர். அத் தகைய 44 சட்டங்களில் 29 சட்டங்கள 4 தொகுப்புகளாக மாற்றப்பட்டு உள்ளன.

இச்சட்டத்தொகுப்புகள் நடை முறைக்கு வந்தால், 80 சதவீதமான தொழிலாளர்கள் சட்ட வரம்புக்கு வெளியே இருப்பார்கள் என்கிற அபாயமும், அதன் காரணமாக வேலை நீக்கம், ஆட்குறைப்பு, ஆலை மூடல் போன்றவைகளுக்கு அரசின் அனுமதி பெறாமலேயே நடைமுறைப்படுத்த முடியும் என்கிற அபாயமும் உள்ளது.

மோட்டார் வாகனச் சட்டம் திருத்தப்பட்டதன் காரணமாக பொது போக்குவரத்து என்கிற அமைப்பு பாதுகாப்பற்றதாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள இந்த 3 வேலை நிறுத்தத்தில் அனைத்து பிரிவு தொழிலாளர்களும் கலந்து  கொண்டு வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த வேலைநிறுத்த போராட் டத்தை வெற்றி பெற செய்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

பேருந்துகள் ஆட்டோக்கள் ஓடுமா?

ஆளுங்கட்சியான தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதால் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான பேருந்துகள் நாளை இயக்கப்படாது என்று தெரிகிறது.

அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கம்   இந்த வேலை  நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. எனவே அந்த தொழிற் சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வழக்கம் போல் பணிக்கு வருவார்கள். எனவே குறைந்த எண்ணிக்கையில் பேருந் துகள் இயக்கப்படலாம் என்று தெரிகிறது.

சி.அய்.டி.யு.வில் ஆட்டோ தொழிலாளர்கள் அதிகளவில் அங்கம் வகிக்கின்றனர். எனவே பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடுவதற்கு வாய்ப்பு இல்லை. வணிகர் சங்கங்கள் இந்த போராட் டத்துக்கு இதுவரையில் ஆதரவு தெரிவிக்கவில்லை. எனவே கடைகள், வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்.

வங்கிகள் பங்கேற்பு

அரசு ஊழியர் சங்கங்களின் இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் 25 கோடிக்கு அதிகமானோர் பங்கேற்பார்கள் என அனைத்து இந்திய வர்த்தக காங்கிரஸ் நிர்வாகி அமர்ஜீத் கவுர் தெரிவித்தார்.

மேலும் விவசாயிகள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள் வார்கள் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங் கேற்க உள்ளதாக வங்கித்துறை அறிவித்து உள்ளது. இதைப்போல காப்பீடு துறையும் போராட்டத்தில் இணைவதாக அறிவித்து உள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *