மக்களோடு மக்களாக: உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கான விண்ணப்பம் விநியோகம் ஒரு லட்சம் தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று வழங்கினர்!

2 Min Read

சென்னை, ஜூலை 8  தமிழ்நாடு முழு​வதும் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாம் ஜூலை 15 ஆம் தேதி தொடங்க உள்ள நிலை​யில், அதற்​கான விண்​ணப்ப விநி​யோகம் நேற்று (7.7.2025) தொடங்​கியது. தன்​னார்​வலர்​கள் வீடு வீடாகச் சென்று திட்​டம் குறித்து விளக்​கி, விண்ணப்பங்களை வழங்​கினர்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

மக்​களின் குறை​களை நேரடி​யாக கேட்​டறி​யும் வகை​யில் தமிழகம் முழு​வதும் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ முகாம்​கள் நடத்​தப்​படும் என்று சட்​டப்​பேர​வை​யில் முதலமைச்சர் மு.க.ஸ்டா​லின் அறி​வித்​தார். அதன்​படி, தமிழ்நாட்டின் அனைத்து நகர்ப்​புற, ஊரக பகு​தி​களி​லும் ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி நவம்​பர் மாதம் வரை இந்த முகாம் நடை​பெற உள்​ளது.

நகர்ப்​புறங்​களில் 3,768, ஊரக பகு​தி​களில் 6,232 என மொத்​தம் 10 ஆயிரம் சிறப்பு முகாம்​கள் நடை​பெற உள்​ளன. இதில், நகர்ப்​புற பகு​தி​களில் 13 அரசுத் துறை​களின் 43 சேவை​களும், ஊரக பகு​தி​களில் 15 துறை​களின் 46 சேவை​களும் வழங்​கப்பட உள்​ளன. அத்​துடன், மருத்​துவ முகாம்​களும் நடத்​தப்பட உள்​ளன. இது மட்​டுமின்​றி, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்​டத்​துக்​கான விண்​ணப்​பம் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ முகாம்​களில் மட்டுமே வழங்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, மகளிர் உரிமை தொகை பெற தகு​தி​யுள்ள விடு​பட்ட மகளிர் இருந்தால், இந்த முகா​முக்கு சென்று விண்​ணப்​பிக்​கலாம்.

விண்ணப்பங்கள் விநியோகம்

இந்​நிலை​யில், இந்த முகாம்​களில் பயன் பெறு​வதற்​கான விண்​ணப்ப படிவங்​களை வீடு வீடாக விநியோகம் செய்​யும் பணி தமிழ்நாடு முழு​வதும் நேற்று (7.7.2025) தொடங்​கியது. இப்​பணி​யில் ஒரு லட்சம் தன்​னார்​வலர்​கள் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். இவர்​கள் வீடு வீடாகச் சென்​று, ‘உங்​களு​டன் ஸ்டாலின்’ முகாம் நடை​பெறும் நாள், இடம் குறித்த விவரங்​கள், அங்கு வழங்​கப்​படும் பல்​வேறு அரசுத் துறை​களின் திட்​டங்​கள், சேவை​கள், அதில் பயனடைவதற்​கான தகு​தி​கள், தேவைப்​படும் ஆவணங்​கள் குறித்து விளக்கி வரு​கின்​றனர்.

முகாம் தொடர்​பான தகவல் கையேடு, விண்​ணப்பப் படிவங்​களை​யும் வழங்கி வரு​கின்​றனர்  சட்டப்பேரவை உறுப்பினர்கள், வார்டு கவுன்​சிலர்​கள், ஊராட்​சிமன்றத் தலை​வர்​கள் உள்​ளிட்​டோரும் சென்று படிவங்​களை வழங்கி வரு​கின்​றனர். சென்​னை​யில் 200 வார்​டு​கள் உள்ள நிலை​யில், நேற்று 6 வார்​டு​களில் முகாம் தொடர்​பான விண்​ணப்​பங்​கள், கையேடு​களை தன்​னார்​வலர்​கள் வழங்​கினர். இப்​பணியில் 2 ஆயிரம் பேர் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர்​. இங்​கு மொத்​தம்​ 400 மு​காம்​கள்​ நடைபெற உள்​ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *