கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 7.7.2025

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பீகார் சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவது உறுதி – ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வான்.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்குவது மேலும் விரிவுபடுத்தப்படும் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

* ஓய்வு பெற்று 8 மாதங்களாகியும் அதிகாரப்பூர்வ வீட்டை காலி செய்யாத மேனாள் தலைமை நீதிபதி சந்திரசூட்-ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடிதம்

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பீகார் தேர்தல் வாக்காளர் பட்டியல் திருத்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு: தேர்தல் ஆணையத்தின் செயல்முறை “இந்தியாவின் அரசமைப்பு ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலை குறிக்கிறது, ‘நாம், மக்கள்’ என்பதில் பொதிந்துள்ள மக்கள் இறையாண்மையின் நெறியை மீறுகிறது” என்ற வாதத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது என்று PUCL தலைவர் கவிதா சிறீவஸ்தவா மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

* தொழிலதிபர் கோபால் கெம்கா கொலை பீகாரை இந்தியாவின் குற்ற தலைநகராக பாஜகவும், நிதிஷூம் மாற்றி விட்டனர்: காங். கடும் தாக்கு. “பீகாரின் சகோதர, சகோதரிகளே, இனியும் இந்த அநீதியை பொறுத்து கொள்ள முடியாது. உங்கள் குழந்தைகளை பாதுகாக்க முடியாத அரசாங்கம் உங்கள் எதிர்காலத்திற்கு பொறுப்பேற்க முடியாது” என ராகுல் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* தேர்தல் நடைபெற உள்ள பீகாரில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக ஆர்ஜேடி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

* பாளையங்கோட்டை கோயிலில் எஸ்சி இணையர் தங்கள் திருமணத்தை நடத்த ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதி.

தி இந்து:

* 28% வறுமை விகிதம் உள்ள எந்த நாடும் ‘நான்காவது மிகவும் சமமானவர்கள்’ என்று கூற முடியாது: காங்கிரஸ் தாக்கு.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *