இனி ஹாஸ்டல்கள் இல்லை ‘சமூகநீதி விடுதிகள்’

1 Min Read

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது சமூக நீதி பாதையில் முன்னேறி செல்லும் திராவிட மாடல் அரசின் நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று என நெட்டிசன்கள் பலரும் வரவேற்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி பொருந்தாக் கூட்டணி

தொல். திருமாவளவன்

அதிமுக – பாஜக கூட்டணி என்று சொல்லிக்கொண்டாலும் கூட அது பொருந்தாக் கூட்டணியாக உள்ளது என விசிக தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய இருகட்சிகளும் மனமொத்து களப்பணி ஆற்றுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்றார். பொருந்தாக் கூட்டணியை உருவாக்கி தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என கூறுவது நேர் முரணாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *