விழுப்புரத்திலிருந்து வேலூருக்கு வழக்கு மாற்றம் அரசியல் எதிரிகள் இதன் பின்னணியில் உள்ளனர் அமைச்சர் க.பொன்முடி தரப்பு வாதம்

Viduthalai
3 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, நவ. 12-  அரசியல் எதிரிகள் கடிதம் எழுதியதன் அடிப்படையில் தனக்கு எதி ரான வழக்கு விழுப்புரம் நீதி மன்றத்தில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்டது என தகவல் கிடைத்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத் துத்துறை அமைச்சராக பதவி வகித்த க.பொன்முடி, வருமா னத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும் பத்தினர் மீதும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், இந்த வழக்கில் இருந்து பொன் முடி உள்ளிட்டோரை விடு தலை செய்து கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்து, இதுதொடர்பாக க.பொன்முடி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தற்போது உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரிக்கிறார்.

வழக்கு நீதிபதி எம்.ஜெயச் சந்திரன் முன்பு வெள்ளிக்கிழமை முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் க.பொன் முடி தரப்பில் மூத்த வழக் குரைஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, “வழக்கின் விசார ணையை விழுப்புரம் நீதிமன் றத்தில் இருந்து வேலூருக்கு மாற்றியது தான் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுப் பதற்கு முக்கியக் காரணம் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அவ்வாறு மாற் றும்படி நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. அவ்வாறு மாற் றுவது தொடர்பாக தங்களிடம் கருத்தை கூட கேட்காத நிலை யில், வழக்கை மாற்றியதற்கு தாம் எப்படி பொறுப்பேற்பது?” என வாதிட்டார்.

மேலும், “வேலூர் நீதிமன் றத்தில் வழக்கின் விசாரணை முடிந்து நான்கு நாட்களில் தீர்ப்பு அளித்ததாக கூறப் படுகிறது. ஆனால், அந்த நீதி பதியால் இந்த வழக்கு 9 மாதங்கள் விசாரிக்கப்பட்டது. 

பொன்முடியின் அரசியல் எதிரிகள் யாரோ கடிதம் எழு திய பின்னர் தான் வழக்கின் விசாரணை விழுப்புரத்திலி ருந்து, வேலூருக்கு மாற்றப்பட் டதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே அந்த கடிதத்தை வழங்க பதிவுத் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதி பதி, இது தொடர்பாக நிர்வாக ரீதியாக தன்னால் உத்தரவு பிறபிக்க முடியாது. மனுவாக தாக்கல் செய்தால் பரிசீலிப்ப தாக கூறினார். தொடர்ந்து வாதிட்ட மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ, “சட்ட சபையில் க.பொன்முடியின் ஆக்கப்பூர்வமான செயல்பாடு மற்றும் அரசியல் திறன் காரண மாக திமுக ஆட்சியில் 1996-2001 மற்றும் 2006-2011 என இரண்டு முறை அமைச்சராக இருந்தவருக்கு எதிராக அரசி யல் பழிவாங்கும் நடவடிக்கை யாக அப்போதைய முதலமைச் சர் ஜெயலலிதாவால் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

மேலும், இந்த விவகாரத்தில் ஊடகங்களின் வெளிச்சம் அதி கமாக உள்ளது. தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த தால் தம்மை குற்றவாளியாக சித்தரிக்கின்றனர். வேலூர் நீதி மன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சார்பில் மூத்த வழக்குரைஞர் ஆர்.பசந்த் ஆஜராகி, உச்ச நீதி மன்ற உத்தரவுப்படி தனது தரப்பை வாதத்தை விரிவாக வைப்பதற்கு அவகாசம் வேண் டும் எனக் கோரி டிசம்பர் 27ஆம் தேதி வழக்கை ஒத்தி வைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்க மறுத்த நீதி பதி, ‘நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசா ரிக்க உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ள நிலையில், நீண்ட காலத்துக்கு ஒத்திவைக்க முடி யாது. அமைச்சர் க.பொன் முடியை விடுதலை செய்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையின் நிலைப்பாடு என்ன?’ என நீதிபதி கேள்வி எழுப்பி னார். அதற்கு பதிலளித்த கூடு தல் குற்றவியல் வழக்குரைஞர் பாபு முத்துமீரான், வேலூர் நீதிமன்ற தீர்ப்பை ஆய்வு செய்து வருவதாகவும், அதற் குள் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசார ணைக்கு எடுத்து விட்டதாகவும் கூறினார்.

இருப்பினும், லஞ்ச ஒழிப்பு துறையின் நிலைப்பாடு குறித்து விளக்கம் பெற்று தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை நவம் பர் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *