முதியோர், பெண்கள் இல்லங்கள் பதிவு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்

viduthalai
1 Min Read

சென்னை, ஜூலை 6- முதியோர் பெண்களுக்கான இல்லங்களைப் பதிவு செய்வதுடன், உரிமங்களைப் புதுப்பிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, மாநில அரசு சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டிலுள்ள பெண்கள் விடுதிகள்-இல்லங்கள், முதியோா் இல்லங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்வதற்கான நடைமுறைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இதற்கென தமிழ்நாடு இணைய சேவை முகப்பில் ஒரு சிறப்பு சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சேவை வழியாக, முதியோா் இல்லங்களைப் பதிவு செய்வதுடன், பெண்களுக்கான இல்லங்கள் பதிவு மற்றும் உரிமங்களுக்கு விண்ணப்பித்து அவற்றைப் பெறலாம். அத்துடன் பணிபுரியும் மகளிா் விடுதிக்கான உரிமம் அதன் வழியே வழங்கப்படும்.
சமூக நலத் துறையின் கீழ் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்கள், தங்களுடைய உரிமங்கள் காலாவதியாகும்போது புதிய இணையதள நடைமுறையைப் பயன்படுத்தி உரிமங்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *