ஓலா, ஊபர் கட்டண உயர்வு அனுமதியை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்! வணிகர் சங்கம் கோரிக்கை

1 Min Read

சென்னை, ஜூலை 5- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
ஓலா, ஊபர் போன்ற வாடகை கார் சேவைக் கட்டண உயர்வுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்திருப்பது கெட்ட வாய்ப்பாகும். சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதித்தது மக்கள் நலனுக்கு எதிரானது.
மேலும், ‘பீக் அவர்ஸ்’ கட்டண உயர்வு 2 மடங்காக உயர்த்திக்கொள்ள அனுமதித்திருப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்த கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களை வெகுவாக பாதிப்புக்கு உள்ளாக்கும்.

இதை ஒன்றிய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளித்துள்ள கட்டண உயர்வு அனுமதியை திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *