பெரியார் சுயமரியாதை திருமண நிலைய மேனாள் இயக்குநர் ‘ஜாதி கெட்டவள்’ என்ற நூலை எழுதிய சுயமரியாதைச் சுடரொளி திருமகள் அவர்களின் 85ஆம் ஆண்டு பிறந்த நாளான நேற்று (4.7.2025) கழகப் பொருளாளர் வீ.குமரேசன் தலைமையில் திருமகள் இறையன் குடும்பத்தினரும், தோழர்களும் பெரியார் திடல் சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். கழகப் பொருளாளரிடம் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 வழங்கினார். பெரியார் மாணாக்கன் குடும்பத்தினர் மாதாந்திர நன்கொடை சந்தா தொகை ரூ.3700அய் வழங்கினர்.
நன்கொடை
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books