கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 5.7.2025

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* பீகாரில் விரைவில் நடைபெற உள்ள தேர்தலில், ஓவைசி, ஆசாத், பிரசாந்த் கிஷோர் ஆகியோர் தலைமையில் உள்ள சிறிய கட்சிகளால் பிரியும் வாக்குகள்; அதன் காரணமாக என்.டி.ஏ, இந்தியா கூட்டணி போடும் வெற்றிக் கணக்கு பாதிக்கலாம் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*இந்தியா கூட்டணியில் ஓவைசி கட்சி: ‘மதச்சார்பற்ற வாக்குகளில் பிளவு ஏற்படுவதைத் தவிர்க்க’ கூட்டணிக்கு லாலுவுடன் ஏ.அய்.எம்.அய்.எம். (AIMIM) கட்சி  விருப்பம் தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் பீகார் மாநில தலைவர் அக்தருல் இமான் தங்களுடைய கட்சியை மெகா கூட்டணியில் இணைந்து போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பொய்யாகக் கூறுவதாக திமுக குற்றச்சாட்டு. ஒன்றிய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்கும் கூட தமிழ்நாடு அரசு தனது நிதியை வழங்கி வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

தி இந்து:

* பல்கலைக்கழக சட்டங்களுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்ததற்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்.

* நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2569 பணியிடங்களை நிரப்ப அனுமதி: உயர்நீதிமன்றம் வழங்கிய தடையை நீக்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

தி டெலிகிராப்:

* ‘மோடி-நிதிஷ்-ஷா ஆகியோர் தங்கள் கைப்பாவை தேர்தல் ஆணையத்திடம் ஏழைகள், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குரிமை யைப் பறிக்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளனர்’, லாலு பிரசாத் கண்டனம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

*`மோடி ஜி, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?`: ‘இந்தியா எல்லா மூலைகளிலும் எதிரிகளால் சூழப்பட்டுள்ளது’, பிரதமரின் வெளியுறவுக் கொள்கையை படு தோல்வி என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே காட்டம்.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *