இந்துக் கோவிலுக்கு நிலம் வழங்கிய முஸ்லிம் முதியவரை சிறையிலடைத்த உ.பி. காவல்துறை

1 Min Read

உத்தரப்பிரதேச மாநிலம் பதாயுவைச் சேர்ந்த ஹனிஃப் என்பவர், தங்கள் கிராமத்தில் ஹிந்துக்களுக்குக் கோவில் இல்லை என்பதால், தனக்குச் சொந்தமான நிலத்தை கோவில் கட்டுவதற்காக வழங்கியுள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கோவிலின் பராமரிப்புப் பணிகளையும் ஹனிஃப் மேற்கொண்டு வந்துள்ளார்.

கோவிலின் ஓர் ஓரத்தில் நீண்ட காலமாக ஹனிஃப் தொழுது வந்துள்ளார். இந்த நிலையில், அண்மையில் அந்தக் கிராமத்திற்கு வந்த சில ஹிந்து அமைப்பினர். ஹனிஃப் தொழுகை நடத்துவதைப் படம்பிடித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில், காவல் துறை அதிகாரிகள் ஹனிஃப் மீது பி.என்.எஸ். 298 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர். பிற மத உணர்வுகளைப் புண்படுத்துதல் மற்றும் பொது இடத்தில் அவமரியாதையாக நடந்துகொள்ளுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *