ஆசிரியருக்குக் கடிதங்கள்

1 Min Read

‘பெரியார் உலக’ நிதியாக ரூ.1,00,000 அய்யா மதுரைக்கு வரும்போது எங்கள் குடும்பம் சார்பாக வழங்குவோம்

எங்கள் குடும்பத் தலைவரும், பாசத்திற்குரியவருமான ஆசிரியர் தாத்தா அவர்களுக்கு வணக்கம்.
மதுரை இளமதி முருகேசனின் மகன் செல்வி. கவின்மதி அன்புடன் எழுதிக் கொள்வது,
இங்கு நாங்கள் அனைவரும் நலமாக உள்ளோம். அதுபோல் அங்கு தாங்களும், பாட்டியும் மற்றும் நம் குடும்பத்தினர் அனைவரும் நலமாக இருக்க விரும்புகிறேன்.
திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கான தங்களின் நிதி அறிக்கையை ‘விடுதலை’ நாளிதழில் படித்தோம். தந்தை பெரியாரின் தத்துவத்தாலும், தங்களின் வழிகாட்டுதலாலும் இன்று எங்கள் குடும்பம் நல்ல நிலையில் உள்ளது. எங்களின் நன்றியை காட்ட தாங்கள் மதுரைக்கு வரும்பொழுது லட்சம் ஒன்றுக்கான காசோலையை எங்களின் குடும்பத்தின் சார்பாக தங்களிடம் அளிக்க உள்ளோம். எங்களுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த தமிழர் தலைவர் தாத்தா அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

– கவின்மதி, மதுரை

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *