கேரளாவில் வேகமாக பரவும் டெங்கு, எலிக்காய்ச்சல் இதுவரை 34 பேர் பலி

1 Min Read

திருவனந்தபுரம், ஜூன் 18 கேரளாவில் டெங்கு, எலிக்காய்ச்சல் உள்பட தொற்று நோய்கள் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 34 பேர் பலியாகி விட்டனர். 

கேரளாவில் கடந்த சில மாதங்களாக டெங்கு, எலிக்காய்ச்சல், மலேரியா, மஞ்சள் காமாலை, டைபாய்டு உள்பட தொற்று நோய்கள் வேகமாக பரவி வருகின்றன.  

இந்த ஆண்டு கேரளாவில் எலிக் காய்ச்சலால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. பாலக்காட்டை சேர்ந்த ஜினு மோன் (32) என்பவர் டெங்கு காய்ச்சலால் பாதிக் கப்பட்டு கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருந்தார். 

ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இவர் மரணமடைந்தார். 

இதையடுத்து கடந்த ஒரு மாதத்தில் கேரளாவில் டெங்கு காய்ச் சலால் மரணமடைந்தவர்கள் எண் ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. கேர ளாவில் டெங்கு, எலிக்காய்ச்சல் உள்பட தொற்று நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *