சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மாநாட்டு விளம்பரப் பணி – பரப்புரை

2 Min Read

மதுரையில் நடைபெற இருக்கும்  சுயமரியாதை இயக்கம் குடிஅரசு இதழ் நூற்றாண்டு நிறைவு திறந்த வெளி மாநாட்டை மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தும் நோக்கத்தோடு மாவட்ட துணைச் செயலாளர்க.சிவா ஒருங்கிணைப்பில் முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர் க.அழகர், மாவட்ட துணை தலைவர் பொ.பவுன்ராஜ், இரா.திருப்பதி, இராலீ.சுரேஷ், தனுஷ்கோடி, பெத்தானியாபுரம் பாண்டி, பேக்கரி கண்ணன், மு.மாரிமுத்து, இளைஞரணி செயலாளர் பா.காசி, அமைப்பாளர் ச.வேல்துரை, முரளி, மாநில மாணவர் கழக துணை செயலாளர்  சீ.தேவராஜபாண்டியன் ஆகியோர் கடந்த நான்கு நாட்களாக மதுரை கடைத்தெருக்களில்துண்டறிக்கைப் பரப்புரை,நன்கொடை திரட்டும் பணியை மேற்கொண்டனர்.

தொடர்ந்து பத்து நாட்களுக்கு இந்த கடைவீதி பரப்புரையை நடத்துவதாக தெரிவித்தனர்.தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தே.எடிசன்ராஜா, வே.செல்வம், மாவட்ட தலைவர் அ.முருகானந்தம் ஆகியோர் தொண்டறப் பணியில் ஈடுபடும் கழகத் தோழர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

மன்னார்குடியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – அழைப்பிதழ் வழங்கல்

6.7.2025 அன்று மாலை 6 மணி அளவில் மன்னார்குடி பந்தலடியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா குடி அரசு இதழ் நூற்றாண்டு நிறைவு விழா திறந்த வெளி மாநாடு மற்றும் வி.சி.வில்வம் எழுதிய கொள்கை வீராங்கனைகள் நூல் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்கள்

மாநாட்டிற்கான ஏற்பாட்டுப் பணிகள் மற்றும் விளம்பரப் பணிகள் சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவை சந்தித்து மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மன்னை மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், பொதுக் குழு உறுப்பினர் ஆர்.எஸ். அன்பழகன், மாவட்டத் துணைத் தலைவர் இன்பக்கடல், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வை.கவுதமன் ஆகியோர் மாநாட்டு அழைப் பிதழை வழங்கி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தனர்.

தஞ்சை பி.ஜி.இராஜேந்திரன் பிறந்தநாள் திராவிடர் கழகம் சார்பில் வாழ்த்து

காங்கிரஸ் கட்சியின் தஞ்சை மாநகர் மாவட்டத்தலைவர் ,தஞ்சாவூர் மாநகர விடுதலை வாசகர் வட்டத்தலைவர் பி.ஜி.இராஜேந்திரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து கழக சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் ஆகியோர் பயனாடை அணிவித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் நூலை பரிசாக வழங்கி வாழ்த்தினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *