இம்பால், ஜூன் 18 – குக்கி பழங்குடியினரை அழித் தொழிக் கும் கொள்கையை, ஒன்றிய – மாநில ஆட்சியாளர்கள் கையில் எடுத்துள்ளதாகவும், மணிப்பூரில் நடை பெறும் வன்முறைச் நிகழ்வுகளுக்கு, ஆயுதமேந்திய பாஜக ஆதரவுக் குழுக்களே காரணம் என்றும் மணிப்பூர் பழங்குடியினர் தன்னார்வ அமைப்பு உச்ச நீதிமன்றத் தில் தெரிவித்துள்ளது. எனவே, ஒன்றிய அரசின் வெற்று வாக்குறுதிகளை நம்பாமல், குக்கி பழங்குடியின சமூகத்தினருக்கு ராணுவத்தின் மூலம் பாதுகாப்பளிப்பதை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத் தியுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப் பூரில், ‘மெய்டெய்’ சமூகத்தின ருக்கும் குக்கி, நாகா உள்ளிட்ட பழங்குடியினர் சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, 40 நாட்களுக்கும் மேலாக வன்முறை நீடித்து வருகிறது. மே 3-ஆம் தேதி முதல் தற்போது வரை 105 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக் கான வீடுகள், நிறுவனங்கள், வாக னங்கள், வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளன. வன்முறையில் பாதிக்கப்பட்ட சுமார் 50 ஆயிரம் பேர், 349 முகாம் களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வன்முறை மேலும் பரவாமல் தடுக்க 11 மாவட்டங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது. இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. சிஆர்பிஎப், அசாம் ரைபிள்ஸ், ராணுவம் என 20 ஆயிரம் பேர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். எனினும், வன்முறை குறைந்தபாடாக இல்லை.
இந்நிலையில்தான், 15.6.2023 அன்று வன்முறைகள் அரங்கேறி யுள்ளன. குக்கி பழங்குடி சமூகத் தைச் சேர்ந்த ஆயுதக் குழுக்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிப்பூரின் காமென்லோக் கிரா மத்தில் நடத்திய தாக்குதலில் மெய்டெய் சமூகத்தைச் சேர்ந்த
9 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக குக்கி சமூகத்தை சேர்ந்த மாநில அமைச்சர் நெம்சா வின் இம்பால் நகர வீட்டை சிலர் தீ வைத்து எரித்தனர்.
இம்பாலின் நியூ செக்கான் பகுதியில் உள்ள குக்கி சமூகத்தவரின் வீடுகளுக்கும் தீ வைத்தனர். வன்முறையைத் தடுக்கும் வகையில் அதிரடிப்படையினர் அங்கு துப் பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் நாலாபுற மும் சிதறி ஓடினார்கள்.
இந்நிலையில், மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள, ஒன்றிய பா.ஜ.க. அரசின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஆர்.கே. ரஞ்சன் சிங்கின் வீடு, 14.6.2023 அன்று பின்னிரவில் வன்முறையாளர் களால் தீ வைக்கப்பட்டது. அமைச்சரின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் 9 பேர், பாதுகாப்பு வீரர்கள் 5 பேர், கூடுதல் பாதுகாப்பு வீரர்கள் 8 பேர் மொத்தம் 22 பேர் பாதுகாப்புப் பணியில் இருந்தும் தாக்குதலைத் தடுக்க முடியவில்லை.
வன்முறைகள் தொடர்பாக பா.ஜ.க. முதலமைச்சர் என். பைரேன் சிங், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் பேசுகையில், “நாங்கள் வன்முறையை அடக்குவதில் உறுதியாக உள்ளோம். பல்வேறு கட்டங்களாக பல தரப்பினரு டனும் ஆலோசனை நடத்தி வருகி றோம். ஆளுநர் தலைமையில் அமைதிக் குழுவும் அமைக்கப்பட் டுள்ளது.
அதன் உறுப்பினர்களு டனான ஆலோசனை விரைவில் தொடங் கும். வெகு சீக்கிரமாக அமைதியை நிலைநாட்டுவோம். உடனடியாக நிலைமை சீராவது கடினம்தான். ஆனால் மாநிலத்தில் வன்முறைகள் குறைந்து வருகின்றன. வன்முறை யாளர்கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
மெய்டெய் – குக்கி சமூகத்தவர் இடையே மோதல் இல்லை
இந்நிலையில்தான், ‘மணிப் பூரில் குக்கி பழங்குடியினரை ‘இன அழிப்பு’ செய்யும் கொள்கையை ஒன்றிய அரசும், மாநில முதலமைச்சர் பைரேன் சிங்கும் பின்பற்றி வருகின்றனர்’ என்று மணிப்பூர் பழங்குடியினர் அமைப்பு (Tribal Forum) உச்ச நீதிமன்றத்தில் இடைக் கால விண்ணப்ப மனுவில் புகார் தெரிவித்துள்ளது. அந்த மனுவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
மாநிலத்தில் பெரும்பான்மை மெய்டெய் சமூகத்தினரும், குக்கி பழங்குடியின சமூகத்தினரும் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் நிலையில், இந்த இரு சமூகத்தினரிடையே மோதல் நிலவி வருவதாக கூறப்படுவது உண்மைக்கு மாறானது.
இரு சமூகத்தினரி டையே சில விடயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், நீண்ட காலமாக மாநி லத்தில் இணைந்து வாழ்ந்து வருகின்றோம் என்ற விடயத்தையே இத்தகையச் செய்தி கள் மறைக்கப் பார்க்கின்றன. மேலும், மாநிலத்தில் அதிகாரத்தில் உள்ள கட்சிக்குத் தொடர்புடைய 2 ஆயுதமேந்திய வகுப்புவாத குழுக் கள், பழங்குடியினர் சமூகத்தினர் மீது திட்டமிட்ட தாக்குதலை நடத்திவரும் சூழல் இப்போது உருவெடுத்துள்ளது.
இதற்கு முன்பாக, இந்த விவகா ரம் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மே 17-ஆம் தேதி விசாரிக்கப்பட்ட போது, ‘பிரச்சினைக்கு உரிய முறையில் தீர்வு காணப்படும்’ என்று ஒன்றிய அரசு சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்ட பிறகும் குக்கி பழங் குடியினத்தைச் சேர்ந்த 81 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 31 ஆயிரத்து 410 பேர் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்திருக் கின்றனர்.
குக்கி பழங்குடியினரை ‘இன அழிப்பு’ செய்யும் கொள்கை யை ஒன்றிய அரசும், மாநில முதலமைச் சரும் பின்பற்றி வருகின்றனர். எனவே, ஒன்றிய அரசின் ‘வெற்று வாக்குறுதி களை’ நம்பாமல், குக்கி பழங்குடியின சமூகத்தினருக்கு ராணுவத்தின் மூலமாக உரிய பாது காப்பை உச்சநீதிமன்றம் அளிக்க வேண்டும். மேலும், இந்த விவகா ரம் தொடர்பாக விசாரணை நடத்த அசாம் மாநில மேனாள் காவல்துறைத் தலைவர் ஹரே கிருஷ்ண தேகா தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு (ஷிமிஜி) அமைக்கப்பட வேண்டும் என்ப தோடு, வன்முறையில் உயிரிழந்தவர் களின் குடும்பத்தினருக்கு 3 மாதங் களுக்குள் தலா ரூ. 2 கோடி இழப் பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் வலியுறுத்தப் பட்டுள்ளது.