சென்னை, ஜூன் 18 – சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் 104 மருத்துவ உதவி மற்றும் தகவல் மய்யம் மூலம் நீட் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு ஏற்படும் மன உளைச் சலை தவிர்க்கும் வகையில் மனநல ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 15.6.2023 அன்று தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதா வது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கடந்த 2021ஆ-ம் ஆண்டு மே மாதம், 104 தொலைபேசி மருத்துவ மற்றும் தகவல் மய்யம் 24 மணி நேர சேவை மூலம் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவ-மாணவி களுக்கு ஏற்படும் மன உளைச்சல் மற்றும் தற்கொலை எண்ணங் களை தவிர்ப்பதற்கு ஆலோசனை வழங்கும் விதமாக தொடங்கி வைக்கப்பட்டது. 40 மன நல ஆலோசகர்கள் பணியில் அமர்த் தப்பட்டு மன நல ஆலோசனை கள் வழங்கப்பட்டு வருகிறது. 2022-ஆம் ஆண்டில் 60 மனநல ஆலோசகர்களை கொண்டு இச் சேவை விரிவுபடுத்தப்பட்டது. இந்த ஆண்டில் (2023) நட்புடன் உங்களோடு மனநல சேவை அலைபேசி எண் 14416 தொடங் கப்பட்டு கூடுதலாக 20 மனநல ஆலோசகர்கள் மற்றும் 2 மன நல மருத்துவர்களை கொண்டு வலுப்படுத்தப்பட்டு செயல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ‘104’ மருத்துவ உதவி தகவல் மய்யம் என்பது தமிழ் நாடு முதலமைச்சரின் நோக்கத் தின்படி, இந்த ஆண்டும் தமிழ் நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுதிய 1,44,516 பேருக்கு மே 18ஆம் தேதி ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப் பட்டது. அதன் மூலம் இதுவரை 54,374 மாணவ-மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. அதில் 177 பேர் அதிக மனநல அழுத்தத்தில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவர் களிடம் தொடர்ந்து பேசப் பட்டு வருகிறது.
மனநல ஆலோசனை
நீட் தேர்வில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 68,823 தேர்ச்சி பெறாத மாணவ-மாண விகளின் விவரங்கள் நீட் தேர்வு நிர்வாகத்திடம் கேட்கப்பட்டு உள்ளது. அவர்களின் விவரங் கள் கிடைத்தவுடன் அந்த மாண வர்களை தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகள் வழங் கப்படும். இதுமட்டுமன்றி நீட் தேர்வு முடிவில் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று அகில இந் திய அளவில் முதலிடம் பெற் றுள்ள விழுப்புரம் மாவட் டத்தை சார்ந்த மாணவர் பிர பஞ்சன் ஒரு மிகப்பெரிய சாத னையை படைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களில் நான்கு இடங்கள் தமிழ்நாட்டை சேர்ந்த 4 மாணவர்கள் இடம் பிடித்துள்ளது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. இதன் மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உரிய பயிற்சி கள் தமிழ்நாட்டில் கிடைக்கிறது என்பது உறுதியாகி உள்ளது.
கலந்தாய்வு
ஒன்றிய அரசு 15 சதவீதத்துக்கான கலந்தாய்வு நடத்தி முடித்தவுடன்தான் தமிழ்நாடு அரசு மீதமுள்ளவர்களுக்கு கலந் தாய்வு நடத்த வேண்டியுள்ளது. இதனால் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு இந்த ஆண்டு ஒரே நேரத்தில் 15 சதவீதம் மற்றும் 85 சதவீத மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இதற்கான விதிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் உடனடியாக வழங்கினால், கடந்தாண்டு ஏற்பட்ட கால தாமதத்தையும் தவிர்த்து உட னடியாக கலந்தாய்வு நடத்தப் பட்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விரைந்து முடிக்கப் படும். மேலும் அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் தேர்வுக் குழு செயலாளர் ஆகியோரிடம் அடுத்த வாரமே மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விண் ணப்பங்கள் வரவேற்கும் பணியை தொடங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் கால தாமதம் இன்றி உடனடியாக மருத்துவ மாணவர்கள் சேர்க்கை உறுதிபடுத்தப்படும். மேலும், இந்த ஆண்டு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 450 இளங்கலை மருத்துவப் படிப்பு இடங்களும், அரசு புதுக் கோட்டை பல் மருத்துவக் கல் லூரியில் 50 பல் மருத்துவ இடங் களும், கே.கே.நகரில் உள்ள ஈ.எஸ்.அய். மருத்துவக் கல்லூரியில் 50 இளங்கலை மருத்துவ இடங் கள் என மொத்தம் 550 மருத்துவ படிப்பிற்கான இடங்கள் கூடுத லாக கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.