கீழடி அருகே கொந்தகையில் 15 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு

1 Min Read

அரசியல்

திருப்புவனம். ஜூன் 18 – சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கொந்தகையில் 15 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. 

திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் 9ஆ-ம் கட்ட அகழாய்வுப் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கி வைத்தார். இங்கு 4 குழிகள் தோண்டப்பட்டன. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பானை ஓடுகள், சேதமடைந்த பானைகள், மரக்கரி துகள்கள் கண்டெடுக்கப்பட்டன. 

இதைத் தொடர்ந்து, கொந்தகையில் நடைபெற்ற அகழாய்வுப் பணியில், ஒரே இடத்தில் 15 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. 2 அடியிலேயே தென்பட தொடங்கிய நிலையில், முழுமையாக தோண்டிய பின்னர் முதுமக்கள் தாழிகள் திறக்கப்படும், என தொல்லியல் துறை யினர் தெரிவித்தனர். இதனிடையே, கீழடி 9-ஆம் கட்ட அகழாய்வுப் பணி யில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள் ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *