பராமரிப்பு உதவி தொகை பெறும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து வாழ்நாள் உயிர் சான்று பெற வேண்டாம் : தமிழ்நாடு அரசு

1 Min Read

சென்னை, ஜூலை 1 பராமரிப்பு உதவி தொகை பெறும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து வாழ்நாள் உயிர் சான்று பெற வேண்டாம் என்று மாற்று திறனாளிகள் நல ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் வெளியிட்டுள்ள சுற்ற றிக்கையில், “தமிழ்நாடு அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 6 வகையான பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படுகிறது. அனைத்து மாவட்ட பயனாளிகளுக்கும் மாதம் 5 ஆம் தேதி அன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக உதவித்தொகை வழங்கப்பட்டு வரு கிறது. மனவளர்ச்சி குன்றியவர்கள், கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு மாதாந்திர உதவிபராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதே போல் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்க்கின்சன் நோய், தண்டுவட மரப்பு நோய் ஆகிய நாட்பட்ட நரம்பியல் பாதிப்பிற்கு உள்ளான நபர்கள், தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், புற உலக சிந்தனையற்ற மதி இறுக்கம் உடையவர்களுக்கான மாதாந்திர பராமரிப்பு தொகை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் பராமரிப்பு உதவி தொகை பெறும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து அவர்களின் வாழ்நாள் சான்றிதழை பெற வேண்டாம் என அனைத்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.’’
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *