காஞ்சிபுரம் கோயில் தேவநாதன் லீலை மறந்து போயிடுச்சா?

1 Min Read

சிறீவில்லிபுத்தூர் கோயிலில் ஆட்டம் போட்ட அர்ச்சகர் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் தேர்வானவரா? அண்டப் புளுகு!

தமிழ்நாடு அரசு மறுப்பு

சென்னை, ஜூலை 1- விருதுநகர் மாவட்டம் சிறீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அர்ச்சகராக பணியாற்றும் அர்ச்சகர்கள் கும்பலாக போதையில் ஆட்டம் போட்டதாகவும், கோவிலுக்கு வந்த பெண்கள் மீது விபூதி அடித்ததாகவும் ஒரு காட்சிப் பதிவு (வீடியோ) சமூகவலைத்தளங்களில் பரவியது. இது காண்போரை கடுமையான அதிருப்தியடையச் செய்தது.

இந்தநிலையில், “அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தால் அர்ச்சகர் ஆனவர்கள், போதையில் நடனமாடுவதாக” சமூக வலைத்தளத்தில் வீடியோ காட்சி பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், “இது திரிக்கப்பட்ட தகவலாகும். வீடியோவில் வரும் கோமதி விநாயகம் என்பவர் தக்கார் தீர்மானத்தின் அடிப்படையில் 20.12.2024 அன்று தற்காலிக அர்ச்சகராக நியமிக்கப்பட்டவர். தற்போது அவர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்று சிறீவில்லிப்புத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் விளக்கமளித்து உள்ளார். இவரை அனைத்து ஜாதியினர் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் வந்தவர் என்று திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகின்றனர்” என்று கூறப்பட்டு உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *