கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 1.7.2025

1 Min Read

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* தெலங்கானா மாநில பாஜக தலைவராக ராம்சந்தர் ராவ் தேர்வு; போட்டியிட வாய்ப்பு தராததால், ராஜா சிங் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்; தெலங்கானா பாஜகவில் விரிசல்.

* “இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் வெளியேறப் போகிறார்கள்… ஏழைகளின் அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது, வக்ஃபு திருத்த சட்டத்தை பீகார் குப்பைத் தொட்டியில் வீசும்…” தேஜஸ்வி ஆவேசப் பேச்சு.

தி இந்து:

* அரசமைப்பின் முகப்புரையில் ஏற்படும் எந்த ஒரு மாற்றத்தையும் எதிர்த்துப் போராடும்: காங்கிரஸ் தலைவர் கார்கே

டைம்ஸ் ஆப் இந்தியா:

* மஹாராஷ்டிராவில் கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஒரே வாக்காளர்கள் பல முறை வாக்களித்துள்ளனர்: காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் சவான் குற்றச்சாட்டு.

* தேசிய கல்விக் கொள்கையின் தொலைநோக்குப் பார்வையை உண்மையிலேயே உணர, ஆங்கிலம் + தாய்மொழி என்ற இரு மொழிக் கொள்கை போதுமானது; ஆங்கிலம் இல்லாமல், குழந்தைகளுக்கு உயர்கல்வி மற்றும் வேலைகளில் பாதகமாக இருக்கும் என்கிறார் வழக்குரைஞர் ஆர்.சிவா.

. குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *